சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு சொக்கப்பனை ஏற்றம்.

சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு சொக்கப்பனை ஏற்றம்.

சொக்கப்பனை ஏற்றம் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நேற்று சொக்கப்பனை ஏற்றப்பட்டது. காா்த்திகைத் தீபத் திருநாளையொட்டி சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணா், கோமதி அம்பாள் ஆகிய சன்னதிகளுக்கே எதிரே பிரதான சாலையில் பனைமரம், பனை ஓலை, கம்புகளான 3 சொக்கப் பனைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி சொக்கப்பனை அமைக்கப்பட்ட இடத்திற்கு வந்தனா். சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை முடிந்ததும் இரவு 8 மணிக்கு 3 சொக்கப்பனைகளும் அடுத்தடுத்து ஏற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Tags

Next Story