வைகாசி பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழா

வைகாசி பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழா
சிவகாசியில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள்...
சிவகாசியில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ திருவிழாவின் 9ம் நாள் திருவிழாவான தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இன்று காலை, ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும், ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமியும்,ஸ்ரீவிசாலாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர்.அதனையடுத்து திரளான பக்தர்கள் ஓம் நமசிவாய,சிவாயநம ஓம் என்று பக்தி கோஷத்துடன் தேரிழுத்தனர்.

நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேர் கோவில் முன்பு நிலைக்கு வந்து சேர்ந்தது.அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தேரோட்டம் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்,கோவில் நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story