புதுக்கோட்டையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

புதுக்கோட்டையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது.

புதுக்கோட்டை திருவப்பூர் அன்னம்மாள் கிறிஸ்தவ ஆலயத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடிய 9A நத்தம்பண்ணை ஊராட்சிமன்ற தலைவர் ஏவிஎம் பாபு இன்று உலகமெங்கும் இயேசு பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் அமைந்துள்ள திருவப்பூர் அன்னம்மாள் கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம் பாபு கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தொடர்ந்து அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.. பின்னர் வயதான பெரியவர்களிடம் ஆசி பெற்றார் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கேக் வகைகள் இனிப்பு மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.

கிறிஸ்மஸ் விழாவில் பங்கேற்ற பங்கேற்ற தலைவர் பாபு அவர்களுக்கு சர்ச் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து கூறி நன்றி தெரிவித்தனர் அன்னம்மாள்புரத்தில் உள்ள சர்ச் நிகழ்ச்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டது இந்த பகுதி மக்களிடம் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது

Tags

Next Story