கீழ்குளம் பேரூராட்சி சார்பில் கிறிஸ்மஸ் விழா

கீழ்குளம் பேரூராட்சி சார்பில் கிறிஸ்மஸ் விழா
பேரூராட்சி சார்பில் நல உதவி
கிறிஸ்துமஸ் விழாவில் பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கபட்டது
குமரி மாவட்டம் கீழ்குளம் பேரூராட்சியின் தூய்மை பணியாளர்கள் மற்றும் மசூர் பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி அனைத்து கட்சி கவுன்சிலர்கள் இணைந்து கிறிஸ்மஸ் விழாவை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடினர். அனைத்து பணியாளர்களுக்கும் புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவி சரளா கோபால் இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ரகுநாதன், பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ஜான், லாசர், அல்போன்சா, ஷோபா, ஜாஸ்பின், சுகரா பிபி, மல்லிகா, மார்கெட் மேரி, இப்ராஹிம் மற்றும் கிள்ளியூர் திமுக ஒன்றிய செயலாளர் பி கோபால், பேரூர் செயலாளர் எஸ் எம் கான், மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story