குழித்துறை கத்தோலிக்க சேவா சங்கத்தின் சார்பில் கிறிஸ்மஸ் விழா.

குழித்துறை கத்தோலிக்க சேவா சங்கத்தின் சார்பில் கிறிஸ்மஸ் விழா.
 கிறிஸ்மஸ் விழா
குமரி மாவட்டம் குழித்துறை மறை மாவட்ட கத்தோலிக்க சேவா சங்கம் சார்பில் நடந்த கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் வெள்ளி கோடு புனித வியாகுல அன்னை ஆலய அரங்கில் நேற்று மாலையில் நடந்தது.குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி ஏசுரெத்தினம் தலைமையில் கிறிஸ்மஸ் கேக் வெட்டும் நிகழ்ச்சியும், முளகுமூடு மண்டலம் சார்பில் கிறிஸ்மஸ் தாத்தா ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.கிறிஸ்மஸ் விழாவின் சிறப்பம்சமாக கல்பனா சாவ்லா விருது நினைவு திட்டத்தின் கீழ் நினைவு பரிசுகள், மற்றும் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பிற்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டது. திருத்துவபுரம் வட்டார முதல்வரும், குழித்துறை மறை மாவட்ட கத்தோலிக்க சேவா சங்க இயக்குனருமான அருட்பணியாளர் புஷ்பராஜ் ஆசியுரை வழங்கினார். மறைமாவட்ட துணைத் தலைவர் வின்சென்ட் நன்றி கூறினார்.

Tags

Next Story