கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வேலூரில் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர கலந்துகொண்டனர்.

கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி வேலூரில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஏராளாமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் இயேசு கிறிஸ்து குழந்தையாக பிறந்ததை வெளிப்படுத்தும் விதமாக குழந்தை இயேசு சொரூபத்தை எடுத்து காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கிறிஸ்து பிறப்பின் பாடல்களும் இசைக்கப்பட்டன. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வலியுறுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில்களும் அமைக்கப்பட்டு இருந்தனர்.

இதே போல் வேலூர் அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திருச்சபை தேவாலயத்திலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதே போன்று வேலூர் மாவட்டம் காட்பாடி, கிருஸ்டியான்பேட்டை, குடியாத்தம், பள்ளிகொண்டா , பேரணாம்பட்டு, அணைக்கட்டு உள்ளிட்ட பல இடங்களில் கிறிஸ்துமஸ் விழாக்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

Tags

Next Story