ஓமலூர் அருகே தேவாலய கொடியேற்று விழா

ஓமலூர் அருகே தேவாலய கொடியேற்று விழா

கொடியேற்று விழாவில் கலந்து கொண்டவர்கள் 

ஓமலூர் அருகே அன்னை ஜெயராக்கினி தேவாலய பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே நாரணம்பாளையம் அன்னை ஜெயராக்கினி ஆலயத்தில் கொடி ஏற்றத்துடன் பெருவிழா மிகச் சிறப்பாக தொடங்கியது.

இதில் முன்னதாக நாரணம்பாளையம் ஜெயராக்கினி பங்கு தந்தை அருள் சுந்தர் மற்றும் சேலம், நாமக்கல் மாவட்ட ஆர்சி பள்ளிகளின் மேலாளர் கிரகோரிராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற திருக்கொடி பவனியானது நாரணம்பாளையம் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக சென்று தேவாலயத்தை அடைந்தது.

பின்னர் பங்கு தந்தைகள் திருக்கொடிக்கு சிறப்பு பிரார்த்தனை செய்த நிலையில் திருக்கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆர்சி செட்டிபட்டி மற்றும் நாரணம்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிருஸ்துவ பெருமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்டியிட்டு ஏசு பிராணையும் ஜெயராக்கினி மாதாவைவும் பிரார்த்தனை செய்தனர்.

Tags

Next Story