தி. மலையில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தி. மலையில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

திருவண்ணாமலையில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை நகரில் கடந்த சில தினங்களாக முறையாக நகராட்சி நிர்வாகம் மூலம் தண்ணீர் வழங்கப்படவில்லை . இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story