காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

தண்ணீர் கேட்டு சாலை மறியல் 

புதுக்கோட்டையில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் 10 நாள் ஒன்றுக்கு நகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று அரை மணி நேரம் மட்டுமே நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் யானையம்மாள் வீதி கடைவீதி மியூசியம் ஆகிய பகுதிகளில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த நகர்மன்ற தலைவர்கள் நகராட்சி நிர்வாகித்தனர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவும் கூடிய விரைவில் சரி செய்து வாரம் மூன்று முறை குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்த பிறகு சாலை மரியலை பொதுமக்கள் கைவிட்டனர்.

அப்போது அவர்கள் பேட்டி அளிக்கையில் புதுக்கோட்டை நகராட்சியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும் இதில் மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம் வாரம் இருமுறை குடிநீர் வழங்க வேண்டும் என பேட்டி அளித்தனர்.

Tags

Next Story