சிஐடியூ வட்டக் கிளை கூட்டம்

சிஐடியு பெரம்பலூர் வட்டக் கிளை சார்பாக மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சிஐடியு பெரம்பலூர் வட்டக் கிளை சார்பாக மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதிநேர துப்புரவு பணியாளர்களின் சிறப்பு கூட்டம் ஒப்பந்த ஊழியர் கன்வினர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் துப்புரவு பணியாளர்களின் நீதிமன்ற வழக்குகள், மற்றும் பிப்- 16ஆம் தேதி நடைபெறக் கூடிய மறியல் போராட்டம் குறித்து மாநில செயலாளர் அகஸ்டின் விளக்க உரையாற்றினார்.

கூட்டத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு வாரியமே தினக்கூலி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் அடையாளம் காணப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பணி நியமன உத்தர வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் தமிழக அரசு வலியுறுத்தி முன்வைத்து கூட்டதில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் வினோதன், கருப்புசாமி, மாரிமுத்து, அருள்சாமி, மேரி கலைச்செல்வி, தாமரைச்செல்வி, பூங்குழலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story