சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தின விழா!

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தின விழா!

நெமிலி, மேலப்புலம் ஆகிய பகுதியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது .

நெமிலி, மேலப்புலம் ஆகிய பகுதியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது .

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தினவிழா சங்க தலைவர் சி.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆர்.வெங்கடேசன் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

அதைத்தொடர்ந்து கோடைகால தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில், சங்க செயலாளர் குமார், பொருளாளர் டில்லி, நிர்வாகி தமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று மேலபுலம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தில் பணியாற்றும் சி.ஐ.டி.யு. சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர் தினவிழா சங்க தலைவர் வேதாச்சலம் தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story