சிஐடியு தொழிலாளா் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டம்

சிஐடியு தொழிலாளா் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டம்

ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்கத்தினா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்கத்தினா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 1 முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தைத் தொடங்க வேண்டும்.

ஓய்வூதியா்களுக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும். நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

Tags

Next Story