நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளிடம் வெண்டர் கமிட்டியை கூட்டாமல் வசூலில் ஈடுபடும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிஐ டி யு சார்பில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சி ஐ டி யு மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் நகராட்சியில் சாலையோர வியாபாரிகளிடம் அடாவடியாக வண்டிப்பேட்டை வசூல் நடவடிக்கையை கைவிடவும், வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்டிட கோரியும், வண்டிப்பேட்டை வசூல் செய்பவர்கள் மிரட்டுவதை கைவிட வேண்டும், வண்டிபேட்டை வசூலை வென்டர் கமிட்டியில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

சாலையோர வியாபாரிகளுக்கு கழிப்பிட வசதி குடிநீர் வசதி செய்திட வேண்டும், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், நகர விற்பனை குழுவிற்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை நகராட்சி நிர்வாகத்திற்கு முன்வைத்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின், நிர்வாகிகள் ரெங்கநாதன், ரெங்கராஜ், உள்ளிட்ட சாலையோர வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story