ஆளுநரை கண்டித்து தஞ்சாவூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஆளுநரை  கண்டித்து தஞ்சாவூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
சிஐடியு ஆர்ப்பாட்டம்
வெண்மணி தியாகிகளை ஆளுநர் ரவி அவமரியாதை செய்ததாக கூறி சிஐடியு சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெண்மணி தியாகிகள் நினைவகத்தை கொச்சைப்படுத்தி பேசிய, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து, தஞ்சையில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிஐடியு மாநில செயலாளர் சி.ஜெயபால் தலைமையில், கீழ வாசல் மார்க்கெட் அருகில் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட பொருளாளர் பி.என். பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் கே.பாலமுருகன், டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் கே.வீரையன், அரசு போக்குவரத்து மண்டல பொருளாளர் எஸ்.ராமசாமி, தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் மில்லர் பிரபு, ஆட்டோ‌ சங்க மாநகர செயலாளர் ஏ.ராஜா, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கச் செயலாளர் ரவிக்குமார், மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் சுதாகர், கரிகாலன், ஓய்வூதியர் சங்கத் தலைவர் ஜீவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story