திருவாரூரில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. பொதுத்துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. பொதுத்துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார் .இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் அனிபா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story