திருச்செங்கோட்டில் நகர்மன்ற கூட்டம்

திருச்செங்கோடு நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையிலும் ஆணையாளர் சேகர் முன்னிலையிலும் நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமையிலும் ஆணையாளர் சேகர் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி திருச்செங்கோடு நகராட்சி எல்லைகளில் நினைவு வளைவு அமைக்க திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதே போல் நகராட்சி பூங்காக்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரும் வைக்க வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர், பெயர் வைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று பெயர் வைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் கூறினார்,

Tags

Next Story