சேலம் நெத்திமேட்டில் பொதுமக்கள் சாலைமறியல்

சேலம் நெத்திமேட்டில் பொதுமக்கள் சாலைமறியல்

காவல் நிலையம் 

சேலம் நெத்திமேட்டில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம் நெத்திமேடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நேற்று இரவு அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் திரண்டு வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட அந்த பகுதியைச் சேர்ந்த சில நபர்களிடம் விசாரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story