சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம்,ஆமணக்கன்தோட்டி பகுதியில் அமைக்கபட்ட சாலைகள் தரமான முறையில் இல்லை என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம்ஆமணக்கன்தோண்டி கிராம வடக்கு தெரு செல்லும் சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தார்சாலை அமைக்கும் பணி தரமான முறையில் அமைக்கவில்லை எனவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து சாலை மறியல் கைவிடபட்டது. இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது குறிப்பிடதக்கது.

Tags

Next Story