வட மாநில வாலிபரை தாக்கிய பொதுமக்கள்- போலீசார் விசாரணை

வட மாநில வாலிபரை  தாக்கிய பொதுமக்கள்- போலீசார் விசாரணை

 தாக்குதல்

நாகர்கோவிலில் வட மாநில வாலிபரை தாக்கிய பொதுமக்கள் - போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் வாகையடி தெரு பகுதியில் நேற்று இரவு வட மாநில வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். நீண்ட நேரமாக அந்த வாலிபர் அங்கு திரிந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களும், பொதுமக்களும் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் வட மாநில வாலிபர் பிடிபட்டது குறித்த கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த வாலிபர் நாகர்கோவில் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதாக கூறினார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவி இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் மீண்டும் பரவி வருகின்றன. இந்த நிலையில் சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story