பள்ளிபாளையத்தில் தனியார் கல்லூரி பேருந்து வழிமறித்த பொதுமக்கள்

பள்ளிபாளையத்தில் தனியார் கல்லூரி பேருந்து வழிமறித்த பொதுமக்கள்
தனியார் பேருந்தை வழிமறித்த மக்கள்
பள்ளிபாளையத்தில் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் கல்லூரி பேருந்தை பொதுமக்கள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்திற்கு ஈரோட்டில் இருந்து தனியார் கல்லூரி பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பள்ளிபாளையம் பாலம் அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் மேலே மோதியதாக தெரிகிறது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வாகன ஓட்டி மற்றும் வாகன ஓட்டியின் நான்கு வயது பெண் குழந்தைக்கு வலது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் மோதிவிட்டு பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த இருசக்கர வாகன ஓட்டி பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு, இது குறித்து தகவல் தெரிவித்தார்.

ஒட்டமெத்தை என்ற பகுதி அருகே தனியார் கல்லூரி பேருந்து வரும் போது, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி மற்றும் அவருடைய உறவினர்கள் கல்லூரி பேருந்து வழிமறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .அங்கு விரைந்த பள்ளிபாளையம் போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story