கூடலூர் அருகே இரு குடும்பத்தினர் இடையே அடிதடி: போலீசார் விசாரணை

கூடலூர் அருகே இரு குடும்பத்தினர் இடையே அடிதடி: போலீசார் விசாரணை

காவல் நிலையம்

கூடலூர் அருகே இரு குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் சுக்காங்கள் பட்டியைச் சேர்ந்தவர் அழகு தேவன் இவரது மகன் அழகேசன் அருகில் வசிக்கும் சுப்ரமணி என்பவரின் மகள் ரஞ்சனாவை இரண்டாவதாக திருமணம் செய்தார். ரஞ்சனா சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதனால் நேற்று இரு குடும்பத்தினர் இடையே அடிதடி ஏற்பட்டு பலர் காயமடைந்தனர் அதில் படுகாயம் அடைந்த அழகு தேவன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து கூடலூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story