மேட்டூரில் இருபிரிவினர் இடையே மோதல்

மேட்டூரில் இருபிரிவினர் இடையே மோதல்

 மேட்டூர் அருகே கொளத்தூரில் இருவேறு சமூகத்தினரிடைய மோதல் ஏற்பட்டதால், பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேட்டூர் அருகே கொளத்தூரில் இருவேறு சமூகத்தினரிடைய மோதல் ஏற்பட்டதால், பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அருகே கொளத்தூர், கோட்டை மடுவு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு சென்ற சிறுமிகளை ஒரு சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் கேலி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளைஞர்களை தாக்கியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இளைஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் குமார், ரத்தினகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து மேட்டூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கருங்கல்லூர், காவேரிபுரத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags

Next Story