விருதுநகரில் கடன் விவகாரத்தில் இரு தரப்புக்கு இடையே மோதல்: பெண் காயம்

விருதுநகரில் கடன்  விவகாரத்தில் இரு தரப்புக்கு இடையே மோதல்: பெண் காயம்
விருதுநகரில் கடன் விவகாரத்தில் இரு தரப்புக்கு இடையே மோதல் பெண் காயம்
விருதுநகரில் கடன் விவகாரத்தில் இரு தரப்புக்கு இடையே மோதலில் பெண் காயம் அடைந்தார்.

விருதுநகர் சிவந்திபுரம் ஆத்து மேடு பகுதியைச் சார்ந்தவர் ராதிகா இவர் கணவர் அந்தோணி எட்வின், லத்திகாவின் மாமியார் ஸ்டெல்லா என்பவர் மகாலட்சுமி என்பவரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த கடனை சரிவர திருப்பி செலுத்தாத நிலையில் மகாலட்சுமி மற்றும் அவருடைய கணவர் கருப்பசாமி மற்றும் அவருடைய மகன் மூவரும் ஸ்டெல்லா வீட்டிற்கு வந்து அவரை தரகுறைவாக பேசி கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாகவும், இதனால் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்படதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து அங்கிருந்த ஸ்டெல்லாவின் மருமகளான லத்திகாவை மகாலட்சுமியின் மகன் மற்றும் மகாலட்சுமி அவருடைய கணவர் கருப்பசாமி ஆகிய மூவரும் தாக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த ரத்தியா விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய படித்தார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story