குமரி அருகே கோயில் பிரச்சனையில் மோதல்: 2 பேர் மீது வழக்கு

குமரி அருகே கோயில் பிரச்சனையில் மோதல்: 2 பேர் மீது வழக்கு
பைல் படம்
குமரி அருகே கோயில் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் மேலதெருவை சேர்ந்தவர் மாதேஷ் (41). நாகர்கோவிலில் அச்சக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அழகியபாண்டிபுரம், எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (37) கொத்தனார் வேலை செய்கிறார்.

இவர்களுக்கிடையே ஊரில் உள்ள சுடலைமாடன் கோயில் நிர்வாகம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. கடந்த 19ஆம் தேதி இரவு அழகப்பபுரத்தில் வைத்து மணிகண்டன் மற்றும் அதே பகுதி நிஷாந்த் (25), கண்ணன் (51) ஆகியோர் சேர்ந்து மாதேஷ் மற்றும் அவரது அண்ணன் ராஜகோபால் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த ராஜகோபால் மற்றும் மாதேஷ் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாதேஷ் அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் மணிகண்டன், நிஷாந்த், கண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, நிஷாந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமுறைவாக உள்ள மணிகண்டன் மீது ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, கன்னியாகுமரி, சுசீந்திரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஐந்து வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story