12 ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி !

12 ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி  !

மாணவன் கிணற்றில் மூழ்கி பலி

சாத்தூர் அருகே குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மாணவன் உடலை மீட்டு போலீசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஓ மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரது மகன் ஹரிஷ் (16). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்.

முழுமையாக நீச்சல் தெரியாத காரணத்தால் உடம்பில் ட்யூப் கட்டிக்கொண்டு கிணற்றில் குளித்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் டியூப் சேதமடைந்ததால் நீச்சல் தெரியாத ஹரிஷ் கிணற்று நீரில் மூழ்கியதாக தெரிய வருகிறது.

உடனடியாக நண்பர்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தேடிப் பார்த்தும் கிடைக்காததால் சாத்தூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் குதித்து மூழ்கிய மாணவனை சடலமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

திருச்சியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story