தூய்மை பணியாளர் தற்கொலை

புளியங்குடியில் தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அண்ணாமலை நாடார் முடுக்கு தெருவைச் சேர்ந்த சங்கர்(42) சிவகிரி பேரூராட்சியில் தூய்மைப்பணியாளராக பணியாற்றி வருகிறார். சிலதினங்களாக பூட்டியிருந்த இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் இன்று புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் வந்து பார்த்த போது சங்கர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புளியங்குடி போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story