தூய்மை பணியாளர் தற்கொலை

தூய்மை பணியாளர் தற்கொலை
சிவகாசி அருகே கடன் பிரச்சனையால் மரண வாக்குமூலம் வீடியோ மூலம் பேசி தற்கொலை செய்த துாய்மை பணியாளர்....
சிவகாசி அருகே கடன் பிரச்சனையால் மரண வாக்குமூலம் வீடியோ மூலம் பேசி தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே கடன் தொல்லையால் விடியோ வெளியி்ட்டு துப்புரவு தொழிலாளி தற்கொலை.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் கண்ணகி காலனியை சேர்ந்தவர் சித்திரைவேல் மகன் சப்பாணி முத்தையா (25),சிவகாசி மாநகராட்சியில் தற்காலிக துப்பரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சப்பாணிமுத்தையா வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வட்டியை தொடர்ந்து கட்டி வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சப்பாணி முத்தையாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் வங்கி கடன் செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.தனது தாய் பெருமாளம்மாளை வேலைக்கு சென்று வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டியை செலுத்த கூறியுள்ளார்.இதற்கு அவர் மறுத்து உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த துப்பரவு தொழிலாளி சப்பாணி முத்தையா தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறர்கள்.இந்நிலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட துப்பரவு தொழிலாளி சப்பாணி முத்தையா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.அந்த வீடியோவில் தன் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் வாழ விரும்பினாலும் கடன் பிரச்சனையால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story