தொடர் மழையால் சீதோசன நிலையில் மாற்றம்

தொடர் மழையால் சீதோசன நிலையில் மாற்றம்

சீதோஷ்ண நிலை மாற்றம் 

நல்லம்பள்ளி வட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சீதோசன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்து வந்தது இதனால் பூமிக்குள் இருந்து குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டிருந்த நிலையில், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட நல்லம்பள்ளி,கோவிலூர், பூதனஹள்ளி, தொப்பூர்,எர்ரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொழிந்த கன மழை காரணமாக இன்று மே 18 காலை சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிமூட்டம் காணப்பட்டது.

கோடைகாலத்தில் ஏற்பட்ட இந்த பனிமூட்டத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் குளிர்ச்சியான சீதோசன நிலையால் ஊட்டி போல் மாறி உள்ளது, குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story