திருக்குறள் மாணவர் மாநாட்டின் நிறைவு விழா

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடந்த திருக்குறள் மாணவர் மாநாட்டின் நிறைவு விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து "தீராக் காதல் திருக்குறள்" என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் முறையாக தமிழ் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 1000 மாணவர்கள் பங்கேற்ற 2 நாள் “திருக்குறள் மாணவர் மாநாடு 2024" மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று மாநில தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு நடப்பாண்டில் 1330 திருக் குறளையும் முற்றோதல் செய்த 108 பேரில் தென் மாவட்டத்தை சேர்ந்த 31 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழையும் ரூ 15 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கினார். பின்னர் திருக்குறள் சம்மந்தமான பேச்சுப்போட்டி,வினாடி வினா மற்றும் கலைப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு, சான்றிதழையும்,பரிசுகளையும் வழங்கினார்.

Tags

Next Story