குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர்  திட்ட முகாம்

முகாமில் பங்கேற்றவர்கள்

குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்ட நான்காம்  நாள் முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம்குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் நான்காம் நாள் முகாம் நேற்று துவங்கியது. மாநிலம் முழுதும் மக்களின் முதல்வர் திட்ட முகாம் துவங்கி நடந்து வருகிறது.

குமாரபாளையம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் துவங்கிய நான்காம் நாள் முகாமில், நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, முகாமினை துவக்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தி துறை மற்றும் மின்சார வாரியம், வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, வீட்டுவசதி துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். திருநங்கைகள் தங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

தாசில்தார் சண்முகவேல், ஒ.ஏ.பி. தாசில்தார் தங்கம், ஆர்.ஐ., வி.ஏ.ஒ.க்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story