மேட்டூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மேட்டூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சேலம் மாவட்டம், மேட்டூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
மேட்டூர் அருகே ராமன் நகரில மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வீரக்கல் பேரூராட்சித் தலைவர் தெய்வாளை ஸ்ரீ ரவிச்சந்திரன், செயல் அலுவலர் மூவேந்தர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காவல்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட 13 துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொது மக்களிடம் இருந்து 300க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story