மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்பி ஜோதிமணி ஆய்வு

புலியூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை கரூர் எம்பி ஜோதிமணி ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம், புலியூர் பி கே ஏ திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழி வகுக்கும் இந்த திட்டத்தில், அரசு துறைகளை அணுகும் பொது மக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை, விரைந்து செயல்படுத்திடவும், அரசு நிர்வாகத்தில் வெளிப்பட தன்மையை ஏற்படுத்திடும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில், எரிசக்தி துறை,மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, உள்ளிட்ட 10- துறைகளின் சார்பில், மனுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முகாமில், அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து அளித்த மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து ஒப்புதல் சீட்டு வழங்கினர்.

இந்த முகாமை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆய்வு செய்தார். ஆய்வின்போது, புலியூர் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி ,செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, உறுப்பினர்கள் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.

Tags

Next Story