மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்!

புதுக்கோட்டையில் 'மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்' நடந்தது.
புதுக்கோட்டை மாதா மக்கள் மன்றத்தில் நகராட்சி வார்டு 27, 28, 30, 33 உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள "மக்களுடன் முதல்வர் திட்டம்" நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா கலந்து கொண்டார். இந்த முகாமில் இலவச பட்டா, மின்சார வாரியத்தில் பெயர் மாற்றுதல், வங்கி கடன் உள்ளிட்ட ஏராளமான மனுக்கள் வாங்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கான தேவையை மனுக்களாக அளித்தனர். மேலும் மக்கள் முதல்வர் திட்டம் அனைத்து வாடுகளிலும் தொடங்கப்பட்டு இன்று இறுதியாக இந்த நான்கு வார்டுக்கு நடைபெற்றது.

Tags

Next Story