குமாரபாளையத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பரப்புரை

குமாரபாளையம் நகர தி.மு.க சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் .மதுரா செந்தில் அறிவுறுத்தல் படி, குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க சார்பில் 5 மற்றும் 6வது வார்டில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்து பேசினார்.

அவர் பேசியதாவது: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் அறிவிக்கும் வேட்பாளர் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தி.மு.க. அரசின் சாதனைகள் மற்றும் நகராட்சி சார்பில் செய்யப்பட்ட சாதனைகள் பற்றி இல்லம் தோறும் பிரச்சாரமாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரம் துண்டு பிரசுரங்களை அப்பகுதி மக்களிடையே வழங்கி, தி.மு.க. அரசின் சாதனைகளையும் நகர மன்ற தலைவராக நகரத்துக்கு செய்த சாதனைகளையும் விளக்கி எடுத்துரைத்தார்கள். நகராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், சுமதி, நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், கந்தசாமி, பன்னீர்செல்வம் மற்றும் 5வது வார்டு செயலாளர் சசிகுமார், 6வது வார்டு செயலாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஐயப்பன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில், விக்னேஷ் கழக பேச்சாளர் சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.

Tags

Next Story