முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: திமுகவினர் ரத்த தானம்

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரியில் திமுக இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் தர்மபுரியில் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்

. திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார் கோவிந்தன் வரவேற்றார். இளைஞரணி மண்டல பொறுப்பாளரும், இளைஞரணி மாநில துணை செயலாளருமான சீனிவாசன், மாவட்ட அமைப்பாளர் எம் ஜி எஸ் வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், நகர செயலாளர் நாட்டான் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.

இந்த முகாமில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன்,

ஓய்வு பெற்ற சர்வேயர் கோவிந்தன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார் கோவிந்தன் செய்திருந்தார்.

Tags

Next Story