மரக்காணம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மரக்காணம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மரக்காணம் பேரூராட்சி 

மரக்காணம் பேரூராட்சியில் வரும் 28ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பொது மக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல் மரக்காணம் பகுதி பொதுமக்களின் நலன் கருதி வரும் 28ஆம் தேதி இத்திட்டம் நடைபெற உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புதிய மின் இணைப்பு, மின் கம்பங்கள் மாற்றம், பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்து வரி, சுயதொழில், வங்கி கடன், கல்வி உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், புதுமைப்பெண் கல்வி உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களாக கொடுத்து பயன்பெற வேண்டுமென பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Tags

Next Story