நாளை முதல் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

நாளை முதல் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் 4 கிராம ஊராட்சிகளில் நாளை முதல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.
தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்ட மூலம் 13 துறைகளில் 50க்கும் மேற்பட்ட சேவைகளை அந்தந்த ஊர்களுக்கு சென்று வழங்கும் சிறப்பு முகாம்கள் நாளை 05/01/24 முதல் வருகின்ற 23/01/24 வரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 3நகராட்சிகள்,17 பேரூராட்சிகள் மற்றும் நகர்புறங்களை ஓட்டியுள்ள நான்கு கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 13 துறைகளின் சார்பில் வழங்கப்படும் 50க்கும் மேற்பட்ட சேவைகளை அவரவர் பகுதியிலேயே பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story