திருப்பூரில் கூட்டணி வேட்பாளருக்கு செல்வபெருந்தகை வாக்கு சேகரிப்பு

திருப்பூரில் கூட்டணி வேட்பாளருக்கு செல்வபெருந்தகை வாக்கு சேகரிப்பு

கூட்டத்தில் பேசும் செல்வ பெருந்தகை

திருப்பூர் ராயபுரம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை தேர்தல் பரப்புரை ஆற்றினார்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் தமிழ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்ட சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் நடைபெற இருக்கின்ற தேர்தல் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்குமான தேர்தல் எனவும் சிபிஐ மூலம் மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்ற கட்சி பாஜக எனவும் குற்றம் சாற்றினார். ராமர் , இந்து என பேசும் பாஜக இந்து மக்களையும் ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்றால் செய்ய உள்ள வாக்குறுதிகள் குறித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளை விட மாட்டோம் என்றார். ஆனால் பாஜகவில் இணைந்தவர்கள் குற்ற வழக்குகள் முடித்துவைக்கபடுள்ளது. சிபிஐ, அலமக்கதுறை வைத்து மிரட்டி தங்கள் கட்சிக்கு இழுக்கிறார்கள். தொழில்துறையினர்,

அமலாக்கத்துறை மூலம் மிரட்டி நன்கொடை வாங்குகிறார்கள். தமிழகத்தில் வாக்கு கேட்கிறார் மோடி. தமிழ்நாட்டிற்கு இதுவரை என்ன செய்திருக்கிறார். தமிழகத்திற்கு எந்தவித திட்டங்களையும் செய்யாமல் துரோகம் செய்த மோடியை மக்கள் மண்ணிக்க மாட்டார்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அதிமுகவையும் மன்னிக்க மாட்டார்கள். 11, 12 தேதிகளில் ராகுல் காந்தி தமிழகதிற்கு வந்து வாக்கு சேகரிப்பார்.சீனாவின் தூதரக மோடி செயல்படுகிறார் என சுப்பிரமணி சுவாமி சொல்கிறார்.

வரலாறு தெரியாமல் பாஜகவினர் பொய்யை தெரிவித்து வருகின்றனர். சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக நின்றவர்கள் 40 ஆண்டுகளாக அவர்கள் கட்சி அலுவலகத்தில் இந்திய கொடி ஏற்றாமல் இருந்தவர்கள். 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த கச்சத்தீவு விவகாரத்தை பேசும் அவர்கள் சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சீன அரசாங்கம் 30 கிராமங்களுக்கு அவர்கள் பெயர்களை சூட்டி இருப்பதை பற்றி பேச பாஜகவுக்கு திராணி இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்த பரபரக் கூட்டத்தில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் திருப்பூர் தொகுதியின் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Tags

Next Story