பரமத்தி வேலூரில் ரூ.45 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்.

பரமத்தி வேலூரில் ரூ.45 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்.
விற்பனைக்கு வந்த தேங்காய்
பரமத்தி வேலூர் தேசிய ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.45 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனையானது.

பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 696 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.26.29-க்கும், குறைந்த பட்சமாக ரூ.23.17-க்கும், சராசரியாக ரூ.25.19-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.90 ஆயிரத்து 940-க்கு வர்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‌ஏலத்திற்கு ஆயிரத்து 741-கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.26.60-க்கும், குறைந்தபட்சமாக ரூ23.19- க்கும், சராசரியாக ரூ.‌25.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 45 ஆயிரத்து 380- க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags

Next Story