ஓமலூரில் ரூ.3.75 லட்சத்த்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ரூ.3,75,410.32க்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம், ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 12விவசாயிகள் 111மூட்டைகளில் 48.97குவிண்டால் அளவிலான தேங்காய் பருப்புகளை கொண்டு வந்த நிலையில் பருப்புகளை ஏலம் விடப்பட்டது. அதில் 3லட்சத்து 75ஆயிரத்து 410ரூபாய் 32காசுகளுக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக 80ரூபாய் 49காசுக்கும், குறைந்தபட்ச விலையாக 60ரூபாய் 35காசுக்கும், சராசரி விலையாக 78ரூபாய் 99காசுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது எனவும், அப்படி நிர்ணயம் செய்த தேங்காய் பருப்புகளை 4வியாபாரிகள் வாங்கி சென்றதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.

Tags

Next Story