ஓமலூரில் ரூ.3.84 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 19விவசாயிகள் 111மூட்டைகளில் 43.79குவிண்டால் அளவிற்கு தேங்காய் பருப்புகளை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 3லட்சத்து 84ஆயிரத்து 966ரூபாய் 07காசுகளுக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக 90ரூபாய்99காசுக்கும், குறைந்தபட்ச விலையாக 64ரூபாய் 79காசுகளுக்கும் சராசரி விலையாக 90ரூபாய் 99காசுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது எனவும், அப்படி நிர்ணயம் செய்த தேங்காய் பருப்புகளை 5வியாபாரிகள் வாங்கி சென்றதாக வேளாண் விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.

Tags

Next Story