ஓமலூரில் ரூ.4.74 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ. 4.74 லட்சத்த்திற்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.
சேலம் மாவட்டம், ஓமலூர் தமிழ்நாடு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக 19விவசாயிகள் 135மூட்டைகளில் 62.43குவிண்டால் அளவிற்கு தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 4லட்சத்து 74ஆயிரத்து 826ரூபாய் 05காசுகளுக்கு ஏலம் போனது எனவும், அதில் 4வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்கி சென்றதாகவும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.

Tags

Next Story