வெள்ளகோவிலில் ரூ 33 லட்சத்து 73 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவிலில் ரூ 33 லட்சத்து 73 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

தேங்காய் ஏலம்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் வாரந்தோறும் நடைபெற்று வரும் இடத்தில் ரூபாய் 33 லட்சத்து 73 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் வேளான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் பழனி, தொப்பம்பட்டி, பஞ்சூர், வேலம்பட்டி, மூலனூர், சாலப்பாளையம் ஆர்.கோம்பை, பகுதிகளைச் சேர்ந்த 90 விவசாயிகள் 834 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வெள்ளகோவில், முத்தூர், நஞ்சை ஊத்துக்குளி ,ஆர் எஸ் ஊத்துக்குளி, சிவகிரி, அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்த 15 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.நல்ல தரமான தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ. 89.45க்கும் இரண்டாம் தரமான தேங்காய் பருப்பு ரூ.58.45க்கும் ஏலம் எடுத்தனர்.மொத்தம் ரூ.33 லட்சத்து 73 ஆயிரத்து 425க்கு விற்பனை நடைபெற்றது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தெரிவித்தார

Tags

Next Story