ரூ 42 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 42 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் விடப்பட்டது.
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் திருச்சி, வாணியம்பாடி, சின்ன தாராபுரம், மோகனூர், சென்னிமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து 98 விவசாயிகள் 1033 மூட்டைகளில் 52 டன் தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வெள்ளகோவில், புதுப்பை, குருநாதன் கோட்டை, சிவகிரி, நஞ்சை ஊத்துக்குளி சேர்ந்த 10 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர். தேங்காய் பருப்பு கிலோ ரூ.63.42 முதல் ரூ.92.88 வரை விற்பனையானது சராசரி விலையாக ரூ.86.36 விற்பனை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக ரூ.42.65 லட்சத்திற்கு ஏலம் போனது. விற்பனை செய்யப்பட்ட தொகையை அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story