ஓமலூரில் தேங்காய் பருப்பு ரூ.2.80 லட்சத்திற்கு ஏலம்

ஓமலூரில்  தேங்காய் பருப்பு ரூ.2.80 லட்சத்திற்கு ஏலம்

தேங்காய் பருப்பு ஏலம்

சேலமம் மாவட்டம், ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த இரண்டு நாட்களாக 14 விவசாயிகள் 80 மூட்டைகளில் 34.60குவிண்டால் அளவிற்கு விவசாயிகள் தேங்காய் பருப்புகளை கொண்டு வந்த நிலையில் ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 2லட்சத்து 80ஆயிரத்து 672ரூபாய் 50காசுகளுக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக 88 ரூபாய் 30காசுக்கும், குறைந்தபட்ச விலையாக 64 ரூபாய் 88காசுக்கும், சராசரி விலையாக 88ரூபாய் 30காசுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது எனவும், அப்படி நிர்ணயம் செய்த விலைக்கு 4வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்கி சென்றதாக வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.

Tags

Next Story