வெள்ளகோவிலில் ரூ.37 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ37 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.

வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெறும். அதன்படி இந்த வாரம் கரூர், வாணியம்பாடி,திருப்பத்தூர் முத்தம்பட்டி, பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து 85 விவசாயிகள் 910 மூட்டைகளில் 48 டன் தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வெள்ளக்கோவில், முத்தூர், சிவகிரி, நஞ்சை ஊத்துக்குளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்கு வந்திருந்தனர்.

தேங்காய் பருப்பு கிலோ ரூ.52.89 முதல் ரூ.92.99 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ 91.69க்கு விற்பனை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக ரூ 37 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் விற்பனை தொகை செலுத்தப்பட்டதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

Tags

Next Story