காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 71 வது கலந்துரையாடல் இன்று நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மார்ச்- 2024 12 ஆம் வகுப்பு அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடனான “Coffee With Collector” என்ற 71-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கை, துறைகளை தேர்ந்தெடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று 71-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்;ச்சி நடைபெற்றது.

Tags

Next Story