‘Coffee with Collector’ – கல்லூரி மாணவ/மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி

X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 22.09.2025 வரை 13 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 275 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 25 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். கல்லூரி மாணவ/மாணவியருடன் பதினான்காவது நிகழ்வாக ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சார்ந்த 25 மாணவ/மாணவியர் கலந்து கொண்டனர். மாணவ/மாணவியருடன் கலந்துரையாடி அவர்களின் ஆர்வம், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, நான் முதல்வன் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி, துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜேஸ்வரி சுவி, மாவட்ட திறன் அலுவலர் பவித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

