காபி வித் கலெக்டர்...!

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 52-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பல்வேறு தனித்திறமைகள் உள்ள 30 பள்ளி மாணவர்களுடனான “Coffee With Collector” என்ற 52-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மஜெயசீலன் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள்.

Tags

Next Story