காபி வித் கலெக்டர் - 72 வது கலந்துரையாடல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 10 ஆம் வகுப்பு அரசுப் பொது தேர்வில் அரசுப்பள்ளிகளில் பயின்று முதல் 50 இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 39 மாணவ, மாணவிகளுடனான “Coffee With Collector” என்ற 72-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் 11 ஆம் வகுப்பில் எவ்வாறு பாட பிரிவுகளை தேர்ந்து எடுப்பது, 12 ஆம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் எவ்வாறு அதிக மதிப்பெண்களை பெறுவது என்பது குறித்து கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ ஃ மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த அரசு மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 11 ஆம் வகுப்பில் எவ்வாறு பாட பிரிவுகளை தேர்ந்து எடுப்பது, 12 ஆம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் எவ்வாறு அதிக மதிப்பெண்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று 71-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார். இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலனுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

Tags

Next Story